தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பமிக உழன்று நரை கூடி கிழப்பருவமெய்தி கொடுங்கூற்றுக்கிரையென மாயும் வேடிக்கை மனிதன்!
Monday, 23 September 2013
இவரது பெயர் கிம் பீக்.
அபார நினைவாற்றல் கொண்டவர்.
ரெண்டு வயசிலேர்ந்தே புத்தகங்களை படிக்க ஆரம்பிச்சாராம். அதுவும் எப்படி? மிகவும் வேகமாக.
வெறுமனே படிக்கறதோட மட்டுமில்லாம அப்படியே ஞாபகம் வச்சிருக்கவும் இவரால முடிஞ்சுது.
அதிலயும் பாருங்க... வேகமாக படிக்கறதுன்னா வலது கண் மூலமாக வலது பக்கத்துல
இருக்கற பக்கத்தையும் இடது கண்ணின் மூலமா இடப்பக்கமிருக்கும் பக்கத்தையும்
இவரால் படிக்க முடிஞ்சதாம்.
இவரால 12 ஆயிரம் புத்தகங்கள்ல இருக்கற தகவல்களை அப்படியே கம்ப்யூட்டரை போல தர முடிஞ்சதாம்.
ப்ச்... இப்ப இவர் உயிரோட இல்லை. 2009-லயே இறந்துட்டாரு!
டிஸ்கவரில இவரப்
பத்தி பல நிகழ்ச்சிகள் வந்துருக்கு. Rain Man அப்டின்ற ஒரு ஹாலிவுட் படமும்
இவர வச்சு தான் எடுத்துருக்காங்க. இவரது இந்த திறமைக்கு அவரோட மூளையோட குறைபாடு தான் காரணமாம்.