என் சில கீச்சுகளின் தொகுப்பு!
சில
விஷயங்கள் நம் கற்பனைகளை விட மிக சாதாரணமாக இருந்து தொலைந்து விடுகின்றன!
குழந்தைகள் உலகில் நுழைவதென்பது ஒரு கலை! எல்லோருக்கும் அது கை வராது!
வயசான பிறகு தான் நமக்கு வயசானதே உறைக்குது அதுக்குள்ள வயசாயிடுது!
தோல்வின்றது வாழ்க்கை நமக்கு தர்ற பாடங்கள்! என்ன, பல பேருக்கு பாடம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்!
குழந்தைகளோடு விளையாடும் பெரியவர்களின் உடல்மொழியில் அவர்களது பால்யம்
கலந்திருக்கிறது!
ஒவ்வொருவர் பற்றியும் சில பிம்பங்கள் நமக்கு இருக்கின்றன. நேரில் கண்டதும் அவை உடைந்து குமிழிகளாகி
விடுகின்றன!
நான் சொல்லிய பொய்களை விட சொல்லாத உண்மைகளை அதிகம் கவலை தருகின்றன!
எனக்கு உண்மையும் சொல்லத் தெரியுமென்பது பொய்க்குத் தெரியக்கூடும்!
நாம் உலகை நம் பார்வையில் பார்க்கிறோம்! உலகம் அதன் பார்வையில் நம்மைப் பார்க்கிறது... அற்பப் பார்வை!
குழந்தைகள் பெரியவராக நடிக்க விரும்புவதைப் போல பெரியவர்கள் குழந்தைகளாக
நடிப்பதை விரும்புகிறார்கள்
டிவி எனும் அரக்கன் நம் குழந்தைகளின் மனதில் விதைக்கும் தாக்கம் மிக மிக
மோசமானது!
விளைவுகளை அறுவடை
செய்து கொண்டிருக்கிறோம்!
முட்டாளாக இருப்பதன் பெருமை முட்டாளுக்கு மட்டுமே தெரியும்!
வாழ்க்கை எப்போதும் தேடலில் தான் கழிகிறது! தேடுவது கிடைத்து விட்டாலும் கூட!
வெளியே பெய்யும் மழையை விட மனதின் உள்ளே மழையாக பெய்யும் நீ தான் அதிகம்
குளிர்விக்கிறாய்! உன்னிடமே கதகதப்பை தேடி நான்!
வெளியே பெய்யும் மழையை விட மனதின் உள்ளே மழையாக பெய்யும் நீ தான் அதிகம்
குளிர்விக்கிறாய்! உன்னிடமே கதகதப்பை தேடி நான்!
எப்போதுமே மழை மண்வாசனையை மட்டுமல்ல, நிறைய ஞாபகங்களை கிளறி விடுகிறது!
குழந்தைகள் அவர்கள் பெற்றோரிடமிருந்தே அதிகம் கற்றுக் கொள்கின்றனர் # எப்படி பொய் சொல்வது என்பதை!
மழையை
ரசித்துக் கொண்டிருக்கிறாய். உன்னை ரசித்துக் கொண்டிருக்கிறேன் நான்!
வாழ்க்கை
நிறைய புரிதல்களை கொடுக்கிறது! அதனை புரிந்து கொள்ளும் விதத்தில் தான் தவறு செய்து
விடுகிறோம்!
குற்றம் சாட்டப்பட்டவர் அமைதியாக இருந்தால் அடுத்த பிரச்சனைக்கும் அவர் தலையே
உருளும்!
வீட்ல யாராவது அடியோ திட்டோ வாங்கிகிட்டிருக்கற நேரம் பாத்து உள்ள வர
விருந்தாளிங்க மனநிலை சொல்ல முடியாதது!
இன்றைய உலகில் பெரியவர்கள் பெரியவர்களாகவும் சிறியவர்கள் சிறியவர்களாகவும்
இல்லை!
அடுத்தவரின் மனதை படிக்கும் சக்தி கிடைத்து விட்டால் யாருமே நண்பர்கள் இல்லை!
தேவைகளைப் பொறுத்தே பொருளின் மதிப்பு. ஆனால் நேசிப்பதைப் பொறுத்தல்ல அன்பு!
அனைவரும் நாலாபக்கமும் நசுக்கப் பட்ட பின்னரே விஸ்வரூபம் எடுக்கின்றனர்!
நல்லவர்களை நம்பாத இந்த உலகம் தீயவர்கள் தாங்கள் திருந்தி விட்டதாக சொன்னதும்
உடனே நம்பி விடுகிறது!
எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைத்து விட்டால் அதன் மதிப்பிழந்து விடும்!
எல்லோருக்கும் ஏற்ற வகையில் நடந்து கொள்வதில் உள்ள சங்கடம் என்னவென்றால்
அப்படி நடந்து கொள்ள முடியாதது தான்!
என்னிடமிருந்த புன்னகைகளை தெருவில் வீசி விட்டு சென்றிருந்தேன். திரும்ப வருகையில் அனைவரும் எடுத்துக் கொடுத்தனர், வட்டியோடு!
உண்மையைக் கூட சிறிது பொய் கலந்து சொல்லும் போது தான் நம்பி விடுகிறார்கள்!
No comments:
Post a Comment