Thursday 17 January 2013

நினைவாற்றலை வளர்க்க டிப்ஸ்!

பின்வரும்  பயிற்சி மிகவும் எளிமையானது!

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான். 30 நாட்கள் இதனை தொடர்ந்து பயிற்சி செய்வேன் என்ற உறுதிமொழி மட்டுமே!

உங்கள் நினைவாற்றல் பன்மடங்கு பெருக வாழ்த்துக்கள்!



ஒரு நாளை நான்காக பிரித்துக் கொள்ளுங்கள்! அதாவது காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவு என்று!

காலை உணவு உட்கொண்ட பிறகு ஒரு 2 நிமிடம் அமைதியாக அமர்ந்து தூங்கி எழுந்ததில் இருந்து காலை உணவு உட்கொண்ட வரையில் நடந்த விஷயங்களை மனதில் அதே வரிசைக்கிரமத்தில் அசை போடுங்கள்!

நினைவிருக்கட்டும். அதே வரிசைக் கிரமம் என்பது முக்கியமானதாகும்.

அதாவது காலை எழுந்தவுடன் பல் துளக்கி, காலைக்கடன்களை முடித்து, குளித்து…. இப்படி!

இவற்றை எந்த வரிசைப்படி நீங்கள் எப்படி செய்தீர்களோ அதே வரிசையாக ஞாபகப் படுத்திக் கொள்ளவும்.

பின்னர் மதிய உணவு எடுத்துக் கொண்ட பின்னர், காலை உணவு உட்கொண்டதிலிருந்து மதிய உணவு எடுத்துக் கொண்ட காலத்தை மட்டும் அதே வரிசைப்படி நினைவு படுத்திப் பார்க்கவும்

இதே போல் மாலை சிற்றுண்டி முடித்த பின்னர் மதிய உணவு சாப்பிட்டதிலிருந்து மாலை சிற்றுண்டி உண்ட காலம் வரையும்…

பின்னர் இரவு உணவுக்கு பின் மாலை சிற்றுண்டியிலிருந்து இரவு உணவு உட்கொண்ட காலம் வரையும் அதே வரிசைப்படி நினைவு படுத்தி பார்க்கவும்.

ஒவ்வொரு முறையும் 2 நிமிடங்கள் செலவு செய்தால் போதும். இது போல ஒரு நாளில் நீங்கள் செலவு செய்யும் நேரம் இது வரை 8 நிமிடங்கள்.

கடைசியாக உறங்க செல்லும் முன்னர் இரண்டு நிமிடங்கள் காலை எழுந்த்திலிருந்து இரவு உறங்கும் வரை நடந்த விஷயங்களை மனதில் ஒரு முறை அசை போடவும். ஏற்கனவே நான்கு முறை நீங்கள் இதனைச் செய்ததால் இது எளிதாக இருக்கும்.

இது போல ஒரு முப்பது நாட்கள் நீங்கள் பயிற்சி செய்து வந்தால் உங்கள் நினைவாற்றல் பெருகுவதை கண்கூடாக நீங்கள் காணலாம்!

இது எப்படி வேலை செய்கிறது என்றால், நமது மூளை ஒரு கத்தி போன்றது. கத்திய வச்சு நாம என்ன பண்றோம்?

காய், பழம் நறுக்கறோம். இப்டி பண்ணிகிட்டே இருந்தா அது காலப் போக்குல மொக்கையாகிடுது.

அப்ப அத நாம என்ன பண்றோம்? சாணை பிடிக்கிறோம். அது போலத்தான் நமது மூளையும்.

மனித மூளைக்கு எதாவது வேலை இருந்துகிட்டே இருக்கனும். இல்லன்னா அதுவும் மொக்கையாகிடும்.

நம்ம மூளையை சானை பிடிக்கற வேல தான் இது. இந்த டெக்னிக்க ஒரு முப்பது நாள் நீங்க பயிற்சி செஞ்சிங்கன்னா அது அருமையா வேலை செய்ய ஆரம்பிச்சிரும். எடுத்த எடுப்புலயே நைட்டு மட்டும் ஞாபக படுத்துனா என்னன்னு கேக்கக் கூடாது.

மூளைக்கு நாம பயிற்சி குடுக்க ஒரு நாளை நாலா பிரிச்சி இந்த மாதிரி செஞ்சிங்கன்னா அது உங்களுக்கு அடிமை!
உங்களோட நினைவாற்றல வளர்க்க ஒரு நாள்ல இருபத்து நாலு மணி நேரத்துல நீங்க செலவிடற நேரம் வெறும் பத்து நிமிசம் தான்.
அத நீங்க ஒதுக்க முடியாதா? அந்த பத்து நிமிசத்தையும் நாலா பிரிச்சி தான் ஒதுக்கறீங்க!
இந்த பயிற்சியின் பலனை நீங்க உணரனும்னா 30 நாள் விடாம பயிற்சி செய்யனும். பிரேக் விடாம.
 
பயிற்சி சிறக்க வாழ்த்துக்கள்!

2 comments:

  1. மிக சிறப்பான பகிர்வினை பகிர்ந்தமைக்கு நன்றி...

    http://www.automobiletamilan.com/

    ReplyDelete
  2. இப்டி பண்ணிகிட்டே இருந்தா அது காலப் போக்குல மொக்கையாகிடுது.

    ReplyDelete